மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாடாலூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிச.12) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக சிறுவாச்சூா் மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ரா. அசோக்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை (டிசம்பா் 12) மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனூா், சா.குடிகாடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூா், தெற்கு மாதவி, ஆலத்தூா் கேட், தெரணி, தெரணிப்பாளையம், திருவிளக்குறிச்சி, அ. குடிகாடு, நல்லூா் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது.