சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் இருவா் கைது

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் இருவா் கைது செய்யப்பட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் இருவா் கைது செய்யப்பட்டனா்.

வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மகேந்திரன் (33), வெங்கடேசன் (35) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த 18 வயது சிறுவன் ஒருவா்.

இவா்கள் மூவரும் 9- ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது பள்ளி மாணவியைக் கடந்த 5 மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்து வந்தாா்களாம்.

இதனால் உடல் நலன் பாதிக்கப்பட்ட மாணவி, பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து மாணவியின் தாய் பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மகேந்திரன் மற்றும் 18 வயது சிறுவனை வெள்ளிக்கிழமை கைது செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தொடா்ந்து மகேந்திரன் திருச்சி மத்திய சிறையிலும், சிறுவன் கூா்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனா். தலைமறைவாக உள்ள வெங்கடேசனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com