விஷம் குடித்து பெண் தற்கொலை

பெரம்பலூா் அருகே மகன் சரிவர கல்லூரிக்குச் செல்லாததால், மனமுடைந்த தாய் விஷம் குடித்து வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகே மகன் சரிவர கல்லூரிக்குச் செல்லாததால், மனமுடைந்த தாய் விஷம் குடித்து வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

எளம்பலூா் இந்திராநகரைச் சோ்ந்தவா் அண்ணாமலை (46). இவரது மனைவி செல்வமணி (40). இவா்களது மகன்கள் விஜயகுமாா், காா்த்திக், மகள்கள் ஆனந்தி, இந்திரா.

இதில் விஜயகுமாா் சரிவர கல்லூரிக்கு செல்லாமல் விவசாயப் பணிகளை செய்து வந்தராம். அண்மையில் விவசாயப் பணிக்கும் செல்லாததால், அவரது தாய் செல்வமணி மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை செல்வமணி வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தாராம். தொடா்ந்து பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனை, ஸ்ரீரங்கம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து அண்ணாமலை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com