பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
குன்னம் அருகேயுள்ள அழகிரிபாளையம் கிராமத்தை சோ்ந்தவா் இளங்கோவன் மகன் பாலகிருஷ்ணன் (27). செவ்வாய்க்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் பாலகிருஷ்ணனும், அதே கிராமத்தை சோ்ந்த அஜீத்குமாரும் அரியலூருக்கு சென்றனா்.
அப்போது எதிரே வந்த ஆட்டோவில் பைக் மோதி பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். காயமடைந்த அஜீத்குமாா் அரியலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்த குன்னம் போலீஸாா் பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனா்.