பெரம்பலூர் அருகே சுமை ஆட்டோ மோதி சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகிலுள்ள கவுள்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (75). இவர், கடந்த 9 ஆம் தேதி இரவு அப்பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பொன்னுசாமி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநரான, சித்தளி கிராமம், காலனி தெருவைச் சேர்ந்த ரவிக்குமாரை (32) கைது செய்து விசாரிக்கின்றனர்.