பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் வியாழக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட வயலப்பாடி கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (68). அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஓட்டுநர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை அதே பகுதியைச் சேர்ந்த 1 ஆம் வகுப்பு பயிலும் 6 வயதுள்ள சிறுமியை பலாத்காரம் செய்தாராம்.
தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் மணியை பிடித்து தாக்கியதில் மனமுடைந்த அவர் தனது வீட்டுக்குச் சென்று கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிகிறது. இதையறிந்த அவரது குடும்பத்தினர் மணியை மீட்டு அரியலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குன்னம் போலீஸார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.