பெரம்பலூர் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கணவரோடு சேர்த்து வைக்கக்கோரி, பெண் ஒருவர் பெரம்பலூர் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றார். 

கணவரோடு சேர்த்து வைக்கக்கோரி, பெண் ஒருவர் பெரம்பலூர் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றார். 
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள கோலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா (29). பெரம்பலூர் மாவட்டம், அசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ் (33). இருவரும் காதலித்து  கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். 
கடந்த 3 ஆண்டுகளாக தம்பதிகள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனராம். இதனிடையே, கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரேகா புகார் அளித்தும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். 
இந்நிலையில், வியாழக்கிழமை பெரம்பலூர் ஆட்சியரகத்துக்குச் சென்ற ரேகா, காதல் கணவரோடு சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவர் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் போலீஸார், ரேகாவை மீட்டு முதலுதவிக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 
இச்சம்பவத்தால், பெரம்பலூர் ஆட்சியரகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  மகளிர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com