மாசில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டத்தில் மாசில்லா போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வலியுறுத்தியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மாசில்லா போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தைப்  பொங்கலுக்கு முந்தைய நாளை போகிப் பண்டிகையாக "பழையன கழிதலும், புதியன புகுதலுமாக' கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில், வீட்டில் உள்ள பழைய தேவையற்ற மற்றும் செயற்கைப் பொருள்களான டயர்கள், பிளாஸ்டிக் இதர பொருள்களை எரிக்கும் பழக்கத்தைக் கையாண்டு வருகின்றனர். 
இதுபோன்ற செயற்கைப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப் புகைகளான கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத் துகள்கள் ஆகியவற்றால் சுற்றுப்புறக் காற்றின் தன்மை மாசுபடுகிறது.
 மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும், ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுவதோடு, பார்க்கும் திறன் குறைபடுகிறது. 
இதுபோன்ற காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, போகிப் பண்டிகையன்று டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப் பொருள்களைக் கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகி திருநாளை மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடி, சுற்றுச்சூழலையும், மக்களின் உடல்நலத்தையும் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com