புற்றுநோய் பாதிப்பு சிறுவனின்  அறுவை சிகிச்சைக்கு உதவி

பெரம்பலூரில், சமூக வலைதள சேவைக்குழு சார்பில் புறறு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அறுவை

பெரம்பலூரில், சமூக வலைதள சேவைக்குழு சார்பில் புறறு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
பெரம்பலூர் சமூக வலைதள சேவைக்குழு சார்பில், உடல்நலன் பாதிக்கப்பட்ட, கல்வி பெற இயலாத மாணவர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரம்பலூரைச் சேர்ந்த குழந்தை சாய்ராமுக்கு, அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.  பெரம்பலூர் அருகேயுள்ள செஞ்சேரி வித்யாஸரம் காப்பகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சமூக வலைதள சேவைக்குழு செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். அன்னை மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் இளங்கோவன், தனலட்சுமி சீனிவாசன் இருபாலர் கல்லூரி துணை முதல்வர் ஜி. ரவி ஆகியோர் முன்னிலை ஆகியோர் வகித்தனர்.  
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அன்னை பருதம்மா கல்வி நிறுவனங்கள் தாளாளர் கணேசன், நிர்வாக இயக்குநர் பருவதம்மா ஆகியோர், சிறுவன் சாய்ராம் பெற்றோரிடம் அறுவை சிகிச்சைக்காக ரூ. 50 ஆயிரம் வழங்கி பேசினர். 
தொடர்ந்து, அந்தக் காப்பகத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் நாதஸ்வர இசைக்குழுவினர் சரண்யா, செந்தில் குமார், வித்யாஸரம் காப்பக நிர்வாக இயக்குநர் சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சரவணசாமி வரவேற்றார். அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் துரைமுருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com