வேளாண் விற்பனை உள்கட்டமைப்பு மேம்பாடு கருத்தரங்கம்

பெரம்பலூரில் நபார்டு வங்கி சார்பில் வேளாண் விற்பனை உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த கருத்தரங்கம்

பெரம்பலூரில் நபார்டு வங்கி சார்பில் வேளாண் விற்பனை உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, மகளிர் திட்ட அலுவலர் தேவநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் செந்தில்குமார், ரோவர் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி நேதாஜி மாரியப்பன்  முன்னிலை வகித்தனர்.  நபார்டு வங்கியின் மாவட்ட மேலாளர் நவீன்குமார் சிறப்புரையாற்றினார். ரினைசான்ஸ் தொண்டு நிறுவன இயக்குநர் செல்வராஜ்  கருத்துரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் வங்கி மேலாளர்கள், வேளாண், வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com