பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் கிராமத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 கூடுதல் வகுப்பறை கட்டடத்தை, வட்டார கல்வி அலுவலர் ராமதாஸ் முன்னிலையில், பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, வட்டார கல்வி அலுவலர் செந்தாமரைசெல்வி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டெய்சிராணி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, கவுல்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 100-பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கினார் எம்எல்ஏ.