கூலித்தொழிலாளி தீக்குளிப்பு

பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த கூலிதொழிலாளி ஒருவர், வியாழக்கிழமை தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். 


பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த கூலிதொழிலாளி ஒருவர், வியாழக்கிழமை தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். 
பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் துரைசாமி மகன் முருகேசன் (45). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி சாந்தி, குழந்தைகள் சசிக்குமார், சரத்குமார், முத்துலெட்சுமி ஆகியோர் உள்ளனர். முருகேசனுக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முருகேசன் தனது வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், முருகேசனை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com