பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்துக்குள்பட்ட பூங்கா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (48), பரவாய் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர்.
இந்நிலையில், புதன்கிழமை மாலை குன்னம் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று விட்டு, தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் ராஜேந்திரன் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே சென்றுகொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் பைக் மோதி பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.