பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு தனியார் துறையினரால் வேலைவாய்ப்பகத்தின் மூலம் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் சென்னை டி.வி.எஸ் நிறுவனம், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலைக்கு ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களும், சீனிவாசன் அசோஸியேசன் நிறுவனத்துக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.
எனவே கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளோர் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.