பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புற நோயாளி பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வரும் புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பொதுமக்கள் இந்த மருத்துவமனையின் வசதிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர். ஆய்வின்போது, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத், வட்டார மருத்துவ அலுவலர் வசந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.