பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் மற்றும் வேப்பந்தட்டையில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்புக் கிடங்கை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி.
ஆலத்தூர் வட்டம், இரூர் மற்றும் வேப்பந்தட்டையில் தலா ரூ.1.50 கோடி வீதம் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் விதை சேமிப்புக் கிடங்கை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், வேளாண் இணை இயக்குநர் இளவரசன், வேளாண் துணை இயக்குநர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.