கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்துக்கு வாரியத் தலைவர் நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வீரபோயர் இளைஞர் பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வீரபோயர் இளைஞர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநிலத் தலைவர் பு.ரா. சிவசாமி, பேரவையின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில், வீரபோயர் இளைஞர் பேரவையின் கோரிக்கையை ஏற்று போயர், ஒட்டர் மற்றும் 68 சாதிகளுக்கு டி.என்.டி சான்றிதழ் சம்பந்தமாக வருவாய்த் துறை முதன்மைச் செயலர் அதுல் மிஸ்ரா தலைமையில், ஆய்வுக்குழு அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்துக்கு உடனடியாக வாரியத் தலைவர் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.