பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சி.ஐ.டி.யூ சார்பில் சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கு மற்றும் சிறப்பு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட கன்வீனர் கே. மணிமேகலை தலைமை வகித்தார்.
மின் ஊழியர் சங்க உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் ராஜ்குமார், அமுதா, புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாதர் சங்க மாவட்டச் செயலர் ஏ. கலையரசி பெண்களுக்கான சமத்துவம், கண்ணியம், பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், உழைக்கும் பெண்களுக்கு கண்ணியமான வேலை உத்திரவாதப்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 6 மாத ஊதியத்துடன் மகப்பேறு பலன்கள் அளிக்க வேண்டும். அனைத்து முறைசாரா மற்றும் விவசாய பெண் தொழிலாளர்களுக்கு பிரசவ நிதி ரூ. 18 ஆயிரம் உறுதிப்படுத்த வேண்டும்.
பணியிடங்களில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களை குழந்தைகள் காப்பகமாக மாற்றிட வேண்டும். நகரங்களில் வீட்டுவசதி, பாதுகாப்பான போக்குவரதது வசதி ஏற்படுத்த வேண்டும். உணவு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாவட்டம் தோறும் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கட்டுமான சங்க உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் சி. ஆதிலட்சுமி, பி. தனம், அங்கன்வாடி சங்க ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்கள் கே. மேனகா, ஆர். கொளஞ்சி, ஏ. தமிழரசி, முத்துச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.பெரம்பலூர், மார்ச் 16: பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சி.ஐ.டி.யூ சார்பில் சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கு மற்றும் சிறப்பு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட கன்வீனர் கே. மணிமேகலை தலைமை வகித்தார்.
மின் ஊழியர் சங்க உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் ராஜ்குமார், அமுதா, புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாதர் சங்க மாவட்டச் செயலர் ஏ. கலையரசி பெண்களுக்கான சமத்துவம், கண்ணியம், பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், உழைக்கும் பெண்களுக்கு கண்ணியமான வேலை உத்திரவாதப்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 6 மாத ஊதியத்துடன் மகப்பேறு பலன்கள் அளிக்க வேண்டும். அனைத்து முறைசாரா மற்றும் விவசாய பெண் தொழிலாளர்களுக்கு பிரசவ நிதி ரூ. 18 ஆயிரம் உறுதிப்படுத்த வேண்டும்.
பணியிடங்களில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களை குழந்தைகள் காப்பகமாக மாற்றிட வேண்டும். நகரங்களில் வீட்டுவசதி, பாதுகாப்பான போக்குவரதது வசதி ஏற்படுத்த வேண்டும். உணவு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திட போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாவட்டம் தோறும் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கட்டுமான சங்க உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் சி. ஆதிலட்சுமி, பி. தனம், அங்கன்வாடி சங்க ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்கள் கே. மேனகா, ஆர். கொளஞ்சி, ஏ. தமிழரசி, முத்துச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.