பெரம்பலூரில் இன்று 2 மணி நேரம் மின் தடை

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) காலை 9 முதல் 11 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.


பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) காலை 9 முதல் 11 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரா. அசோக்குமார் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  
பெரம்பலூர் தானியங்கி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பழைய பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்கு சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, அண்ணா நகர், கே.கே. நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், பாலம்பாடி, பீல்வாடி, அசூர், சிறுகுடல், சித்தளி, அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com