சிவகங்கை அருகே வியாழக்கிழமை இரவு லாரி மோதியதில் பெரம்பலூரைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ராமச்சந்திரன்(28). இவர், பரமக்குடி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக கிராவல் அள்ளும் லாரியில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், காளையார்கோவில் அருகே புலியடிதம்மத்தில் செயல்பட்டு வரும் கிராவல் குவாரியில் மண் அள்ளுவதற்காக வியாழக்கிழமை நள்ளிரவு ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் லாரிகளில் சென்றனராம். நீண்ட நேரமாகி விட்டதால் அனைவரும் அங்கேயே படுத்து தூங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிவையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஓட்டுநர் கருப்பன் லாரியை பின்னால் எடுத்துள்ளார். அப்போது, அங்கு தூங்கிக் கொண்டிருந்த ராமச்சந்திரன் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.