அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் மாணவர்கள் சேர நடைபெறும் கலந்தாய்வுக்கு w‌w‌w.‌s‌k‌i‌l‌l‌t‌r​a‌i‌n‌i‌n‌g.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளம் மூலம் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  
மாவட்ட கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள், தேதி, இடம் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், இணையதள விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு 94990 55881, 94990 55883 ஆகிய எண்களிலும், w‌w‌w.‌s‌k‌i‌l‌l‌t‌r​a‌i‌n‌i‌n‌g.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியிலும் தொடர்புகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார். 
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர மாவட்ட கலந்தாய்வு மூலம் விண்ணப்பிக்கலாம்.  
மேலும் விவரங்களுக்கு, 04329-228408 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com