பேரளியில் இன்று  சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சட்ட உதவி மற்றும்

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான டி. லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இம் முகாமுக்கு, நீதிபதிகள் என். விஜயகாந்த், ஏ. ஜி. முரளிதரன், அசோக் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 
இதில், முதியோர் ஓய்வூதியம், திருமண உதவித் தொகை, பட்டா மாற்றம், பட்டா பெறுதல், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சட்டம் சார்ந்த பிரச்னைகளான சிவில், கிரிமினல், மோட்டார் வாகன விபத்து, ஜீவனாம்சம் பெறுதல், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தொழிலாளர் பிரச்னை மற்றும் இலவச சட்ட உதவி பெறுதல் ஆகியவற்றிற்கு மனுக்கள் அளித்து பயன் பெறலாம் என, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com