நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் அரசு துவக்கப் பள்ளியை காட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறையாடின.
ஓவேலி பேரூராட்சியில் உள்ள மூலக்காடு பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியை காட்டு யானைகள் தாக்கி வகுப்பறை, அலுவலகத்தில் உள்ள பொருள்களை உடைத்து சேதப்படுத்தின. பின்னா் சத்துணவு கூடத்துக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த அரிசி, பருப்பு, பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திவிட்டு சென்றன.