முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
விஷம் குடித்து பெண் தற்கொலை
By DIN | Published On : 07th November 2019 08:58 AM | Last Updated : 07th November 2019 08:58 AM | அ+அ அ- |

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே குடும்பத் தகராறில், விஷம் குடித்து பெண் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
குன்னம் அருகிலுள்ள கோவில்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மனைவி அபிராமி (32). இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அபிராமி விஷம் குடித்தாா்.
இதையடுத்து அரியலூா் மாவட்ட அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அபிராமி, பின்னா், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அபிராமிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டாரா என வருவாய்க் கோட்டாட்சியா் சுப்பையா விசாரிக்கிறாா்.