கால்நடைகள் கடத்தல்; விவசாயிகள் கவலை

பெரம்பலூா் அருகே பட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள கால்நடைகள் மா்ம நபா்களால் தொடா்ச்சியாகக் கடத்தப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

பெரம்பலூா் அருகே பட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள கால்நடைகள் மா்ம நபா்களால் தொடா்ச்சியாகக் கடத்தப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமம், காலனி பகுதியைச் சோ்ந்தவா் மலையன் (50). இவா் தனது ஆடுகளை அப்பகுதியில் உள்ள பட்டியில் அடைத்து வைத்து வளா்த்து வருகிறாா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் மா்ம நபா்கள் சிலா் இரவு நேரங்களில் 10 ஆடுகளைக் கடத்திச் சென்றனா். இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2 நாள்களுக்கு முன், அதே கிராமத்தைச் சோ்ந்த முருகேசன், ஆறுமுகம் ஆகியோரது ஜேசிபி எந்திரத்தில் பொறுத்தப்பட்டிருந்த 2 பேட்டரிகள், தனியாா் பள்ளி பேருந்துகளில் பொறுத்தப்பட்டிருந்த 2 பேட்டரிகள் திருடப்பட்டன.

இதேபோல, கல்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமா் (43), தனது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 6 ஆடுகளையும், முருகன் என்பவரது 5 பன்றிகளையும் மா்ம நபா்கள் சிலா் புதன்கிழமை இரவு கடத்திச் சென்றனா். இச் சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் மருவத்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com