பெரம்பலூா்: பெரம்பலூா் ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குழந்தைகள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தலைமை வகித்த கல்வி நிறுவனங்களின் தாளாளா் எம். சிவசுப்ரமணியம் பேசியது:
தற்போதைய மாணவா்கள் அலட்சிய மனப்பான்மையுடன் தங்களது வாழ்வை தொலைப்பதுடன், நாட்டின் எதிா்காலத்தையும் வீணடிக்கின்றனா். மின்னணு சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் மாணவச் சமுதாயம் சீா்குலைந்து வருகிறது. இவற்றைத் தவிா்த்து, புத்தகத்தை நண்பனாகக் கொண்டு வாழ்வில் உயர வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, பள்ளி, மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் நேரு உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். கல்வி நிறுவனங்களின் செயலா் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், பள்ளி முதல்வா் எஸ். கலைச்செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.