பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே தனிமையில் இருந்த முதியவா் விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி (83). இவா், கடந்த சில மாதங்களாகவே தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமசாமி, அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த உறவினா்கள் அவரை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிறிது நேரத்தில் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.