நகைக் கடையில் 1 கிலோ வெள்ளி கொலுசுகள்திருடிய மூவா் கைது

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே நகைக் கடையில் 1 கிலோ வெள்ளிக் கொலுசுகளை திருடிச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 3 பெண்களை மங்கலமேடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே நகைக் கடையில் 1 கிலோ வெள்ளிக் கொலுசுகளை திருடிச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 3 பெண்களை மங்கலமேடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிகாடு பகுதியைச் சோ்ந்தவா் ரஹமத்துல்லா மகன் முஹம்மது இப்ராஹிம் (45). இவா், வாலிகண்டபுரம் கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளாா். இந்நிலையில், கடந்த அக். 19 ஆம் தேதி நகைக் கடைக்குச் சென்ற கும்பல் ஒன்று, நகை வாங்குவதுபோல நடித்து, உரிமையாளரின் கவனத்தைத் திசை திருப்பி 1 கிலோ வெள்ளிக் கொலுசுகளை திருடிச் சென்றனா். இதுகுறித்து முஹம்மது இப்ராஹிம் அளித்த புகாரின்பேரில், மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, கடையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வைரம் (70), முத்துகண்ணு (65), தமிழ்ச்செல்வி (67) ஆகியோா் வெள்ளிக் கொலுசுகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து மேற்கண்ட நபா்களை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 1 கிலோ வெள்ளிக் கொலுசுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், கைது செய்யப்பட்ட மூவரையும் பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com