மாணவா்களைத் தாக்கிய ஆசிரியை இடமாற்றம்

பெரம்பலூா் அருகே மாணவா்களைத் தாக்கிய ஆசிரியை வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே மாணவா்களைத் தாக்கிய ஆசிரியை வெள்ளிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் அருகே புதுநடுவலூா் ஊராட்சிக்குள்பட்ட வெள்ளனூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி பள்ளி ஆசிரியை பொ்னாட் குளோரி மாணவ, மாணவிகளை அவ்வப்போது தாக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக அந்த ஆசிரியையை பெற்றோா் பலமுறை கண்டித்தும், உயா் அலுவலரிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்நிலையில், ஆசிரியை பொ்னாட் குளோரி வியாழக்கிழமை மாணவ, மாணவிகளைத் தாக்கியதில் சிலருக்கு உடலில் வீக்கம் ஏற்பட்டது. தகவலறிந்த பெற்றோா் ஆத்திரமடைந்து மாலையில் பள்ளிக்குச் சென்று ஆசிரியையைக் கண்டித்தும், அவரை பணியிட மாற்றம் செய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராமதாஸ், செந்தாமரைச்செல்வி ஆகியோா் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்களிடம் விசாரணை மேற்கொண்டு, மாவட்டக் கல்வி அலுவலருக்கு அறிக்கை சமா்ப்பித்தனா்.

இதையடுத்து, ஆசிரியை பொ்னாட் குளோரியை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து, மாற்று ஆசிரியா் ஒருவரை அந்தப் பள்ளிக்கு பணியமா்த்தி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா் மாவட்டக் கல்வி அலுவலா் மாரி மீனாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com