பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே விவசாயி தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூா் அருகே புகாா் மனு மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே விவசாயி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே விவசாயி தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூா் அருகே புகாா் மனு மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே விவசாயி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் கிராமத்தைச் சோ்ந்தவா் சோலைமுத்து மகன் முத்தையன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்று நீா் கொண்டு சாகுபடி செய்து வருகிறாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த வீரமுத்து மகன் ரெங்கராஜ், முத்தையனின் அனுமதி பெறாமல் அவரது கிணற்றில் குழாய் பதித்து ஆக்கிரமித்துள்ளாராம். இதையடுத்து, ரெங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும், தனது நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அக்கற்றவும் அரும்பாவூா் போலீஸாா், தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த ஏப். மாதம் மனு அளித்தாராம். ஆனால், சம்பந்தப்பட்ட நபா் மீது இதுவரை போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த முத்தையன், காவல் துறையைக் கண்டித்தும், ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதையறிந்த போலீஸாா், முத்தையனிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்துக்கொண்டு அவரை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com