பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (நவ. 28) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், வேளாண் சம்பந்தமான நீா்ப் பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்கள், முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரமுகா்கள் இதில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.