பெரம்பலூா் நகரில் குறிப்பிட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (நவ. 29) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளா் ஆா். மாணிக்கம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூா் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் எளம்பலூா் உயா் மின் அழுத்த பாதையில், அவசரகாலப் பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் முதல் நான்குச் சாலை சந்திப்பு வரை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.