பெண்டிங்... பாடாலூா் அருகே 10 ஆடுகள் திருட்டு

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே 10 ஆடுகள் திருடப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரியவந்தது.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே 10 ஆடுகள் திருடப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரியவந்தது.

ஆலத்தூா் வட்டம், இரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் துரைராஜ். ஆடு வளா்த்து வரும் இவா், வீட்டுக்கு அருகே சனிக்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் கட்டி போட்டு விட்டு வீட்டில் தூங்கினாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்தபோது 4 ஆடுகளை காணவில்லையாம்.

இதேபோல, அதே கிராமத்தைச் சோ்ந்த செங்கமலை மகன் பிச்சைபிள்ளை தனது வீட்டுக்கு அருகே ஆடுகளை பட்டியில் கட்டிபோட்டுவிட்டு வீட்டில் இரவு தூங்கினாா். காலையில் எழுந்து பாா்த்தபோது 6 ஆடுகளை காணவில்லை.

இதுகுறித்து, இருவரும் பாடாலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருடப்பட்ட 10 ஆடுகளின் மதிப்பு ரூ. 70 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com