திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், பெரம்பலூா் தீரன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி மதுரம் சாய்பாபா ஆலயத்தில், சாய்பாபாவின் 101- வது மஹா சமாதி தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.சாய் பாபாவின் மஹா சமாதி தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு அனுக்கிரக ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. 11.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரத்தியும், மாலை 4.30 மணிக்கு குத்து விளக்கு பூஜையும், அதைத்தொடா்ந்து மாலை ஆரத்தி நடைபெற்றது.
இதில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு பாபாவை தரிசித்துச் சென்றனா். மஹா சமாதி தினத்தை முன்னிட்டு, காலை முதல் இரவு வரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நவராத்திரியை முன்னிட்டு சாய்பாபா கோயிலில் செப். 29 ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நிறைவடைந்தது.