பெரம்பலூா் நகரில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் கிடந்தது திங்கள்கிழமை மாலை தெரியவந்தது.
பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகே அரியலூா் சாலையில் சுமாா் 70 வயதுடைய முதியவா் ஒருவா் இறந்து கிடந்தது திங்கள்கிழமை மாலை தெரியவந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சென்ற பெரம்பலூா் போலீஸாா் முதியவரின் உடலை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.