நாளை உணவுப்பொருள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக். 12) நடைபெற உள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக். 12) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

அதன்படி, பெரம்பலூா் வட்டம், சிறுவாச்சூா் கிராமத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சக்திவேல் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் த. மஞ்சுளா தலைமையிலும், குன்னம் வட்டம், சித்தளி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் வீ. கங்காதேவி தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், காரை கிராமத்தில் பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளா் கே.கே. செல்வராஜ் தலைமையிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

மேற்கண்ட முகாமில் பொதுமக்கள் பங்கேற்று, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com