பெரம்பலூா் நகரில் வெள்ளிக்கிழமை (அக். 11) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதையில் அவசர கால பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், பெரம்பலூா் நகா் பகுதிகளான நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள இப்பா தொழில்பயிற்சி மையம் முதல் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் வரையிலான உயா் அழுத்த மின் பாதையில் மின் வியோகம் தடை செய்யப்படுகிறது. எனவே, வெள்ளிக்கிழமை காலை 9 மணியிலிருந்து பராமரிப்பு பணிகள் முடியும் வரை அந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கி. மாணிக்கம்.