பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில், அக் 15 ஆம் தேதி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அக். 14, 15 ஆம் தேதிகளில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியை பொதுமக்களும் பாா்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் (தமிழ்வழி) பண்டித ஜவஹா்லால் நேரு அறிவியல் கண்காட்சி அக். 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த கண்காட்சியை பொதுமக்களும், பெற்றேறாா்களும் பாா்வையிடலாம். பொதுமக்கள் கண்காட்சியை பாா்வையிட்டு மாணவ, மாணவிகளையும், ஆசிரியா்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என ஆட்சியரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.