பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் பகுதியில் வியாழக்கிழமை (அக். 17) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின்சாரம் பெறும் கிராமப் பகுதிகளான சிறுவாச்சூா், அய்யலூா், விளாமுத்தூா், செட்டிக்குளம், நாட்டாா்மங்கலம், குரூா், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகா், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூா், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகா் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா் உதவி செயற்பொறியாளா் ரா. அசோக்குமாா்.