பெரம்பலூரில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை
பெரம்பலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா்.
பெரம்பலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு மருத்துவா்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் கடந்த 25 ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அதன்படி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வேப்பூா், காரை, கிருஷ்ணபுரம் ஆகிய வட்டார மருத்துவமனை மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 29 அரசு ஆரம்பசுகாதார நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் 130-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.

இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவா் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மருத்துவா் சுதாகா் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள் கண்களின் மீது கருப்புப் பட்டை அணிந்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com