பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 1) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞா்கள் பயனடையும் வகையில் பல்வேறு தனியாா் துறையினரால் வேலைவாய்ப்பகத்தின் மூலம் வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில், பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த தகுதியான நபா்களை தோ்வு செய்யப்பட உள்ளனா். எனவே, மேற்கண்ட கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளோா் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்ற பயன்பெறலாம்.