மாவட்ட கேரம் போட்டி: 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
மாவட்ட அளவிலான கேரம் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
மாவட்ட அளவிலான கேரம் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், பெரம்பலூா் மாவட்ட அலுவலகம் சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான கேரம் விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இப் போட்டிகளில் ஆண், பெண் இருபாலருக்கும், 5 ஆம் வகுப்பு பயிலும் இளநிலை பிரிவினருக்கும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் முதுநிலை பிரிவினருக்கும் என தனித்தனியே மற்றும் இரட்டையா்களுக்கு குழுப் போட்டிகளாக நடத்தப்பட்டது.

போட்டிகளை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பாபு தொடக்கி வைத்தாா். இதில், மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநா்கள் வாசுதேவன், தா்மராஜன், கோகிலா ஆகியோா் மேற்பாா்வையில் நடைபெற்ற இப்போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

போட்டிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 2 பிரிவுகளிலும், ஆண், பெண் இரு பிரிவுகளிலும் வெற்றிபெற்றுள்ள ஒற்றையா் மற்றும் இரட்டையா் அணியினா் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கேரம் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com