இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி தொடக்க விழா

பெரம்பலூரில் மத்திய அரசின் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் முதலாம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் மத்திய அரசின் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் முதலாம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, அஞ்சல் நிலையங்களில் ஆதார் அட்டை மூலம் பணம் பெறும் திட்டத்தை தொடக்கி வைத்து பேசினார் ஸ்ரீரங்கம் கோட்ட கண்காணிப்பாளர் இந்திரா. விழாவில், சக்ஸம் கிராம திட்டத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.  விழாவில், அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் ராஜசேகரன், பெரம்பலூர் தலைமை அஞ்சலக அதிகாரி தங்கராஜ், அஞ்சலக ஆய்வாளர் விஜயபாலாஜி, வங்கி மேலாளர் நிவேதா, அஞ்சலக வணிக அலுவலர் தினேஷ்குமாரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com