சாலை விபத்தில் விவசாயி சாவு

பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். 

பெரம்பலூர் அருகே திங்கள்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். 
பெரம்பலூர் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜூ மகன் ராமசாமி (55). இவர், திங்கள்கிழமை காலை கவுல்பாளையம் கிராமத்தில் இருந்து பெரம்பலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். பெரம்பலூர்- அரியலூர் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி அருகே வந்தபோது, பெரம்பலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற கார் மோதி பலத்த காயமடைந்த ராமசாமி, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர், பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ராமசாமி அங்கு உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூத்தனூர், விஷ்ணுபேட்டையைச் சேர்ந்த ராஜகோபால் மகன் உமாபதியை (52) கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com