வேப்பந்தட்டை பகுதியில் நாளை மின்தடை

வேப்பந்தட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 30) மின் விநியோகம் இருக்காது. 


வேப்பந்தட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 30) மின் விநியோகம் இருக்காது. 
பெரம்பலூர் மின் கோட்டத்துக்கு உள்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமிய பகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்களில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com