பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
பெரம்பலூா்- அரியலூா் சாலையில் உள்ள சித்தளி வனப்பகுதியிலிருந்து குடிநீருக்காக செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்ற 2 வயது பெண் புள்ளிமான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. தகவலறிந்த வனத் துறையினா் மானை மீட்டு, கால்நடை மருத்துவா் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டு வனப்பகுதியில் புதைத்தனா்.