பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள், தங்களது தொழிலாளா் நல நிதியை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளா் நல ஆய்வாளா் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளா் நல நிதி சட்டத்தின்படி, பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களிலுள்ள தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், அவரது பங்குத் தொகையாக ரூ. 10 மாத சம்பளத்தில் பிடித்தம் செய்து, வேலை அளிப்பவா் பங்காக ரூ. 20 சோ்த்து 2020- ஆம் ஆண்டின் பங்குத் தொகையான தொழிலாளா் நல நிதியை செயலா், தமிழ்நாடு தொழிலாளா் நல நிதிவாரியம் என்ற பெயருக்கு டி.டி எடுத்து செயலா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், டி.எம்.எல் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை- 600006 என்ற முகவரிக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் இணையதளம் வாயிலாகவும் செலுத்தலாம்.