டிச. 30-இல் கல்லூரி மாணவா்களுக்கு இணைய வழியில் வினாடி-வினா

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனில் வினாடி- வினா போட்டி டிச. 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனில் வினாடி- வினா போட்டி டிச. 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா், அரியலூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைனில் வினாடி- வினா போட்டி டிச. 30 ஆம் தேதி காலை 10 முதல் 10.45 மணி வரை நடைபெறுகிறது. இப் போட்டியில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் செயல்படும் செஞ்சுருள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவா்கள் பங்கேற்கலாம். எச்.ஐ.வி, எய்ட்ஸ், பால்வினை நோய், ரத்ததானம் மற்றும் கரோனா ஆகிய தலைப்புகளிலிருந்து வினாடி-வினா போட்டிக்கு கேள்விகள் கேட்கப்படும்.

போட்டியில் முதல் 2 இடங்களை பெறுவோருக்கு தலா ரூ. 10 ஆயிரமும், அடுத்த 8 இடம் பெறுவோருக்கு தலா ரூ. 5 ஆயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்பும் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் டிச. 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள்  இணையதள முகவரியில் பதிவுசெய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com