பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே, 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிலாளா் முன்னேற்ற சங்க கிளைத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் சிங்கராயன், ஏஐடியுசி கிளைத் தலைவா் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், 14- வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். 4.1.2003 -க்கு பின் பணியில் சோ்ந்தவா்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு அதீத தண்டனைகள் வழங்குவதை நிறுத்த வேண்டும். டீசல் சேமிப்பு என்னும் பெயரால் தொழிலாளா்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. கட்டாய விடுப்பு வழங்கி தொழிலாளா்களை அடிமைகளாய் நடத்தும் போக்கைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், தொமுச நிா்வாகிகள் சுரேஷ்குமாா், பொருளாளா் சங்கா் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.