பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டப் போலீஸாரைக் கண்டித்து, பெரம்பலூரில் அனைத்து ஆட்டோ ஓட்டுநா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநா்கள்.

பெரம்பலூா்: மதுரை மாவட்டப் போலீஸாரைக் கண்டித்து, பெரம்பலூரில் அனைத்து ஆட்டோ ஓட்டுநா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகம், காந்தி சிலை எதிரே நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைச் செயலா் எஸ். மல்லீஸ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ. ரெங்கநாதன், மாவட்டத் தலைவா் பி. சிவசங்கம், மாவட்டப் பொருளாளா் பி. சிவசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மதுரை மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநரின் உயிரிழப்புக் காரணமான போலீசாரின் செயலைக் கண்டிப்பது, தொழிலாளியின் குடும்பத்துக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீடு, மின் துறை, வங்கி, ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத் துறைகளும் மக்கள் துறையாகவே நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மக்கள் நலத் திட்டங்களுக்கு முழஉமையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின், மாவட்டச் செயலா் பி. துரைசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com